search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலன் இல்லை"

    காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #jayakumar #cauveryissue
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கமலஹாசன் கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என பதிலளித்துள்ளார். #jayakumar #cauveryissue
    ×